மத்திய ஊதியக்குழுக்களுக்கு இடையில் 10 வருட கால நீண்ட இடைவெளி உள்ளதால், சென்ற 70 ஆண்டுகளாக மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக மனுவில் கூறப்பட்டு உள்ளது. 7-வது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000-க்கு பதில் ரூ.18,000 என நிர்ணயித்துள்ளது என RSCWS கூறியது. அதோடு பிட்மெண்ட் பாக்டர் 3.15-க்கு பதில் 2.57 என தவறாக முன் மொழியப்பட்டது. முன்பாக 5-வது மற்றும் 6-வது ஊதியக்குழு, ஊதிய திருத்தத்திற்கான 10 ஆண்டு விதிமுறையில் இருந்து விலகி, டிஏ டிஆர் 50%-க்கு மேல் உயரும் தேதியுடன் அதை இணைக்க பரிந்துரைத்தது.

கடந்த 3 மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, எதிர்காலத்தில் DA/DR அடிப்படை ஊதியத்தில் 50% (அ) அதற்கும் அதிகமாக இருக்கும் போது ஊதியத்திருத்தம் செய்யப்படவேண்டும். ஜனவரி-2024 முதல் DA/ DR விகிதம் 50 சதவீதம் (அ) அதற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது என குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வழியில் ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் ஜனவரி 2024 முதல் திருத்தப்படவேண்டும். அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் பணவீக்கத்திற்கு எதிராக எதிர்பார்த்த நிவாரணத்தை அளிக்கவில்லை என குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊதியக்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்க சுமார் 2  வருடங்கள் ஆகும் என குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து செயல்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னும் ஓராண்டு (அ) அதற்கு மேல் எடுக்கும். இது போன்ற சூழலில் 8-வது ஊதியக்குழுவை விரைவில் தொடங்கி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2019 ஜனவரி 1 முதல் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ஊதியக்குழுவை அமைக்கவேண்டிய அவசியமில்லை என கடந்த வருடம் மத்திய அரசசானது தெரிவித்தது. 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சவுத்ரி முன்னதாக தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் இப்போது 42% அகவிலைப்படியை பெறுகின்றனர். இது கூடியவிரைவில் 46% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.