மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது. அதாவது, வரும் மே 31-ம் தேதி மாலை மத்திய அரசு டிஏ குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறது. இந்த மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்போகிறது என்பது முடிவுசெய்யப்படும்.

இப்போது அகவிலைப்படி 42% ஆக இருக்கிறது. இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து அகவிலைப்படி இரண்டரை சதவீதம் அதிகரித்து உள்ளது. அரசாங்கத்தின் தற்போதைய புள்ளி விவரங்களை பொறுத்து மொத்த DA மதிப்பெண் 44.46 சதவீதத்தை எட்டி இருக்கிறது. தற்போது ஏப்ரல்,மே மற்றும் ஜூன் எண்களும் அதில் சேர்க்கப்படவுள்ளது. இந்த முறையும் அகவிலைப்படி 4% அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் பெரும் ஏற்றமானது ஏற்படும்.