மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். உண்மை கண்டறியும் குழுவால் எழும்  அரசியல் சாசனம் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.