பார்கள் நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கும் நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என சென்னை உயர்நீதிமன்றமானது கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரையிலும் மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? என்று கேட்டது. இதுகுறித்து கோவையை சேர்ந்த ஆர்.பூமிராஜ் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.