மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். ‘புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து, கடைக்காரர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்களை மாற்றினால் கடைக்காரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்’ என்றார். இதுவரை 500 மதுக்கடைகளை மூடியுள்ளோம். மேலும், படிப்படியாக கடைகள் மூடப்படும் என்றார்