மயிலாடுதுறையில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை மதுகுடித்த பழனி முருகநாதன், பூராசாமி இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், டாஸ்மார்க் மதுபானம் அருந்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் உடற் கூராய்வில் இருவரது உடலிலும் சயனைடு கலந்திருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக மனோகர் மற்றும் பாஸ்கர் மதுவில் சயனைடை கலந்தது தெரியவந்துள்ளது. இருவரும் கைது. செய்யப்பட்டுள்ளனர்.