ரயிலில் பயணம் செய்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். 6 பேர் மதுரை ரயில்வே மருத்துவமனையிலும், 2 பேர் வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லாமல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்படும். விரைவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்.
மதுரை ரயில் தீ விபத்து: 39 பேர் நலமுடன் உள்ளனர்…. அமைச்சர் மா.சு தகவல்…!!
Related Posts
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read more