ரயிலில் பயணம் செய்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். 6 பேர் மதுரை ரயில்வே மருத்துவமனையிலும், 2 பேர் வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லாமல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்படும். விரைவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்.