தஞ்சையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டி கதை ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது, விஷப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் வந்துள்ளது. எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் வந்துள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்து கொண்டு தான் பாம்பு வீட்டிற்குள் நுழைந்து உள்ளது.

பாம்பை விரட்டினால் போதாது, முதலில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையை அகற்ற வேண்டும். வீடு என்பது தமிழ்நாடு, விஷ பாம்பு என்பது பாஜக, குப்பை என்பது அதிமுக. தமிழ்நாட்டில் அதிமுகவை ஒழித்தால்தான் பாஜகவை விரட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.