மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 1-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை பார்ப்பதற்காகவே பல்வேறு ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் மதுரைக்கு வருவார்கள்.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இக்கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்துக்கு வருவதற்கு அதற்குரிய பாஸ்ஸை வாங்கினால் மட்டும்தான் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

அதுமட்டுமின்றி அதிகாரிகள் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள் என பாஸ் இன்றி எந்த காரணம் கொண்டும் யாரையும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அனுமதிக்ககூடாது என்றும் அமைச்சர் எச்சரித்து உள்ளார்.