நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. நாளை மறுநாள் சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக மது விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.