கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வந்து பகவதி அம்மனை தரிசிப்பது வழக்கம்.

இந்த கோவில் மாசி திருவிழா மார்ச் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில், திருநெல்வேலி-பிலாஸ்பூர் உள்ளிட்ட மேலும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.