மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பான இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், வழக்கறிஞர் ஒருவர் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். இதற்கு, அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன எனக்கூறி, மணிப்பூர் சம்பவத்தை நியாப்படுத்த முடியாது.

இந்தியாவில் உள்ள அனைத்து மகள்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது நிர்பயா சம்பவத்தை போல தனிப்பட்ட ஒன்று அல்ல. திட்டமிடப்பட்ட வன்முறை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.