மத்திய பிரதேஷ் மாநிலம் விதிஷா மாவட்டத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தந்தை விசாரித்த போது பள்ளியில் இருந்து வரும் வழியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அதன் பிறகு அவர் தனக்கு படிக்க வேண்டியது இருப்பதாக கூறி அறைக்கு சென்று விட்டார்.

அந்த சமயத்தில் மருத்துவமனைக்கு சென்று இருந்த தாய் வீட்டிற்கு வந்து மகளைத் தேடிச் சென்ற போது அங்கு அவர் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தந்தை தனது மகளின் இறப்பிற்கு அவளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த ஆட்டோ ஓட்டுனர் தான் காரணம் என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.