மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த 19-ம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களில், ஒருவரின் கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியது தெரியவந்துள்ளது.

அதன்படி, அசாம் ரெஜிமெண்ட் பிரிவில் சுபேதாராக இருந்த அவர், ‘நான் நாட்டை காப்பாற்றினேன். என் மனைவியையும், ஊரையும் காப்பாற்ற முடியவில்லை’ என டிவி சேனல் ஒன்றுக்கு கண்ணீர் மல்க வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.