நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வெளியான மணிப்பூர் பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு நாள் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக மணிப்பூர் விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்களவை 12 மணி வரையும் மாநிலங்களவை 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.