மெய்தி, குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் தத்தளிக்கும் மணிப்பூரில் இணைய சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், மீண்டும் இணைய தடையை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங்களாக இணையதளத் தடை அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர். சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதையடுத்து  இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.