தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, திண்டுக்கல். கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு. நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.