அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ரூ. 29க்கு ‘பாரத் அரிசி’யை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு NCCF, மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். அதன்பின் Amazon, Flipkart போன்ற தளங்களிலும் விரைவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இதன் மூலமாக ஆன்லைனில் மக்கள் புக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.