தமிழகத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. நாளை முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் இன்று முதல் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லவும், அதே போல், அக்டோபர் 2ஆம் தேதி சென்னை, பெங்களூரு திரும்பவும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.