நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாகவும், வேறொரு நடிகையை திருமணம் செய்யப்போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல் தீயாய் பரவி வந்தது. ஆனால் இது குறித்து விஜய் எந்த ஒரு இடத்திலும் பேசவில்லை. இந்த நிலையில் நேற்று சென்னை நீலாங்கரையில் நடந்த மாணவர்கள் சந்திப்பில் விஜய் இது குறித்து மறைமுகமாக பேசினார். அதாவது மேடையில் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், இந்த சமூக வலைதளத்தில் வரும் 75 சதவீதம் செய்திகள் பொய்யானதாகவே இருக்கிறது. நான் எல்லாரையும் சொல்லவில்லை.

ஒரு சில பேருக்கு தான் சொல்கிறேன். கவர்ச்சிகரமான தகவலை பரப்புவதாக நினைத்து சிலவற்றை போலியாக வெளியிடுகிறார்கள். இதனையடுத்து சங்கீதாவோடு விவகாரத்து, நடிகையுடன் இரண்டாம் திருமணம், தந்தையை மதிக்காமல் இருக்கும் விஜய் என பல வதந்திகளுக்கும் இதன் மூலம் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது.