தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக  நாளை (ஜூலை 30) அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு வீடாகச் சென்று குடும்ப தலைவிகளுக்கு டோக்கன் மற்றும் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் அருகில் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேலை பாதிக்கப்படக்கூடாது என்றதற்காக நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.