வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு  மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.