இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் என்றால் விஷத்தன்மை அதிகம் கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனாலும் பாம்புகளும் மனிதர்களைப் போலவே அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்தி விடும். மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில நேரங்களில் தன்னைத்தானே தாக்கிக் கொள்ளும்.

ஆனால் சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள் என பலவற்றில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அடிக்கடி நாம் பார்த்து வருகிறோம். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் செருப்பு ஒன்றி நடுவில் பாம்பு பதுங்கி இருந்துள்ளது. ஒரு நபர் அந்த செருப்பை அகத்திய அடுத்த நொடியே பாம்பு சீறிக்கொண்டு படம் எடுத்துள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.