உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் ஒருசில விடியோக்கள் இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒரு தாய் முயல் தன் குட்டிகளுக்காக தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாராகிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தாயின் அன்புக்கு உலகில் ஈடு இணையில்லை.  இந்த வீடியோவில், ஒரு முயல் தனது குட்டிகளைப் பாதுகாக்க பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது.

தன் குட்டிகள் இருந்த கூட்டை நோக்கி பாம்பை செல்ல விடாமல் தடுத்து போராடிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாம்பு ஆக்கிரோஷமாக கடிக்க முயன்றாலும் முயல் பின்வாங்கவில்லை. @gisellegk8 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.