நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேச பக்தி உணர்வை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த 2022 ஆம் வருடம் 23 கோடி குடும்பங்கள் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினார்கள். இந்த ஆர்வத்தையும் தேசபக்தியையும் தொடரும் விதமாக இந்த வருடம் ஆகஸ்டு 13 முதல் 15 வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக தேசிய கொடிகள் விற்பனை செய்வதை உறுதி செய்யப்பட்டுள்ளது. தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் பக்கத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று கொடியை வாங்கிக் கொள்ளலாம். இ போஸ்ட் ஆபீஸ் வசதி மூலமாகவும் தேசியக்கொடி வாங்கிக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.