சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது இன்று (ஜூலை 24) முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இன்று (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரையும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9:30 மணி முதல் ஒரு மணி வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

முகாம் நடைபெறும் விவரங்கள் குறித்து ரேஷன் கடைகளில் தகவல் பலகை வைக்கப்படு.ம் ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு டோக்கனை வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும். பதிவின் போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகங்களை இல்லத்தரசிகள் எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எந்தவித ஆதாரங்களையும் இணைக்க தேவை கிடையாது.