அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். “மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மட்டும் மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார், தொடர்ந்து, பேசிய மோடி “சமீபத்தில் தீபாவளி பண்டிகையின்போது நாட்டில் பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்டுவருவது ஒரு ஊக்கமளிக்கும் செயலாக உள்ளது” என்றார்.