சென்னையில் புயல் காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடமாடும் வண்டிகள் மூலம் மளைவு விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று கூறினார். மேலும் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தினமும் 20 மெட்ரிக் டன் காய்கறிகளை வாங்கி விற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.