தமிழகத்தில் கனமழை எதிரொளியாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேர்வ அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் நான்காம் தேதி நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய அட்டவணைப்படி டிசம்பர் 11 தொடங்கி 2024 பிப்ரவரி 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.