தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை போல் முழுமையாக மின்வினியோகம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் 90 சதவீதம் என்று மின்விநியோகம் சரி செய்யப்படும். எஞ்சிய பகுதிகளில் நாளை மாலைக்குள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதோடு அனைத்து மின் நிலையங்களிலும் மின் விநியோகத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.