மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்திக்கவுள்ளனர். கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பிரேமலதாவை சந்திக்கின்றனர். திமுக கூட்டணியில் 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் அதிமுகவும் பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது.