மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6000 இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 முதற்கட்ட நிவராணம் கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்டது.

முதல்கட்ட பட்டியலில் கிடைக்காதவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளான இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நிவாரணம் கோரி 5.67 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.