நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் அது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும்  இனி GPS மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதன்மூலம் நேரம் மிச்சமாகும் என்றும், வாகனங்கள் செல்லும் தூரத்திற்கு ஏற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த முறைக்கான பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இன்னும் 6 மாதங்களில் இது அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.