கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த
கொரோனா பாதிப்பில் 6.3 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதேபோல கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்கொரோனா அதிகரித்து வருகிறது. பரிசோதனை எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.