தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய குழந்தையின் பெற்றோரில் யாராவது ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த உடன் வைப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டி அந்த பெண்ணுக்கு வழங்கப்படும்.

வைப்புத் தொகை இருப்பு வைக்கப்பட்ட ஆறாவது ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 1800 ரூபாய் அந்த பெண்ணிற்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். எனவே ஒரே பெண் குழந்தை உள்ள பெற்றோர் இந்த திட்டத்தில் இருந்து பயனடையுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.