தமிழகத்தில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த நிலையில் வேறு என்னென்ன புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாக போகிறது என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.