கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபுதூரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்து சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த நித்யஸ்ரீ சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அதன்பிறகும் மன உளைச்சலில் இருந்த நித்யாஸ்ரீ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.