கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மண்டபள்ளியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்கிய லட்சுமி முகநூல் மூலம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தா என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இதனை அறிந்த வெங்கடாசலம் பேஸ்புக் போன்ற சமூக வலைதளத்தில் தேவையில்லாத நபர்களுடன் பேசி பழக கூடாது என எச்சரித்துள்ளார். மேலும் வெங்கடாசலம் ஆனந்தாவையும் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபித்துக்கொண்டு பாக்கியலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகும் ஆனந்தாவுடன் பாக்கியலட்சுமி பழகி வந்தார். இதனை தொடர்ந்து வெங்கடாசலம் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். கடந்த 21-ஆம் தேதி வெங்கடாசலமும் பாக்கியலட்சுமி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆனந்தா அங்கு வந்து வெங்கடாசலத்துடன் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து பாக்கியலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.