தென்காசி மாவட்டத்தில் ஆறு வயது மகனை பெற்ற தந்தை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த முனியாண்டி கார்த்திகா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் மகன் மகிழன் தனக்கு பிறந்த பிள்ளை இல்லை என சந்தேகம் அடைந்த முனியாண்டி சொந்த மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பாவிடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கிணற்றிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.