திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பாலமுருகன் என்பவர் தமிழ் துறை பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி ஆன்லைன் மூலம் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் அளித்தார்.

இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் அகிலன் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான பாலமுருகனை தேடி வந்தனர். நேற்று கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாலமுருகனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.