நடிகை குஷ்பூ ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து பிரபல நடிகையாக மாறிவிட்டார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல படங்களிலும் அசத்தியுள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் அரசியலுக்கு சென்று விட்டார். இவரின் அரசியல் பாதை சற்று கரடு முரடாக இருந்தாலும் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர் ரகுமான் இசைக்கச்சேரிஇல் கலந்து கொள்ள ஆர்வம்  காட்டிய ரசிகர்கள் கையில் பாஸ் இருந்தும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் நடிகை குஷ்புவின் மகளும் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு கலவரம் மேற்பட்டதால் ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். இதனால் ஏ ஆர் ரகுமான் மீது ரசிகர்கள் கடும் கோபத்தை காட்டி வருகிறார்கள்.

இந்நிலையயில் இது குறித்து பேசி குஷ்பூ கச்சேரிக்கு  அனுமதிக்காததிற்கும், ஏ ஆர் ரகுமானுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை மாறாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்த ஏற்பாட்டாளர்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து குஷ்பூ தன் மகளை பிரபலப்படுத்த இப்படி ஒரு முயற்சியா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.