தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பதாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கௌதமி. ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் படத்தில் மூலமாக ஹீரோயினாக ஜொலித்தார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பிரபு போன்ற முன்னணி நடிகர்களோடு தமிழ் சினிமாவில் வலம் வந்தார். காலங்கள் செல்ல செல்ல முன்னணி நடிகையாக இருந்த கௌதமி தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கௌதமியின் சொத்து மதிப்பை கட்டுமான நிறுவன அதிபர் ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து கூறிய கௌதமி, நான் 17 வயதிலிருந்து இதுவரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். 2004 ஆம் வருடம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். இதனால் சினிமாவில் இருந்து விலகினேன். மேலும் குடும்ப தேவைக்காக என்னுடைய நிலத்தை விற்கலாம் என்று முடிவு செய்து நிறுவன அதிபர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.

அந்த நிலத்தை நான்கு கோடிக்கு விற்பனை செய்த அந்த நபர் என்னிடம் 64 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தார். அத்தோடு கையெழுத்து மோசடி செய்து என்னுடைய நிலம் எட்டு ஏக்கரை அவரும் அவருடைய குடும்பத்தினரும் மோசடி செய்துள்ளார்கள். இதை நியாயம் பெறாமல் நாம் விடமாட்டேன் என்று கூறினார். இதை பார்த்த இணையவாசிகளோ சொத்தை சேர்த்தால் மாத்திரம் போதாது அதை பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.