வைகைப்புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு நகைச்சுவையில் மட்டுமல்லாமல் பாடகராகவும் இருந்துள்ளார். நகைச்சுவையில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த திரைப்படங்கள் தான் பிரண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை போன்ற பல படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் தற்பொழுது நாய் சேகர், மாமன்னன் போன்ற தொடர் படங்கள் மூலமாக சினிமாவில் என்ட்ரி  கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வடிவேலு இத்தனை காலமாக எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளதாம். அந்த வீட்டின்  மதிப்பு மட்டும் இரண்டு கோடி இருக்குமாம். மேலும் இவரிடம் டொயோட்டோ, ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற நான்கு சொகுசு கார்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரையில் ஒரு வீடு ஏக்கர் நிலமும் உள்ளதாம். அந்த வகையில் வடிவேலுவுக்கு மொத்தம் முப்பது கோடிசொத்து  இருக்கும் என்று தெரியவந்துள்ளது.