ஈரான் நாட்டின் கராஜில் பகுதியை சேர்ந்தவர்கள் தரியூர் மெஹர்ஜூய் – வஹிதே முகமதிபர் தம்பதி. சினிமா தயாரிப்பாளரான தரியூர் மெஹர்ஜூய் நேற்று முன் தினம் தனது மகளை இரவு உணவுக்கு வீட்டிற்கு வருமாறு குறுஞ்செய்தி மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தம்பதியின் மகள் மோனா இரவு வீட்டிற்கு வந்தபோது அவரது பெற்றோர் இருவரும் கழுத்தில் கத்தி குத்தப்பட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோனா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.