கடந்த ஏழாம் தேதி தொடங்கி 10வது நாளாக இன்றுவரை இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இதனால் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இருதரப்பிலும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் போர் தொடங்கி இது நாள் வரையில் 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அதில் 190 பேர் ஹமாஸ் படையினருடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.