தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கும் நிலையில் விரைவில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் அரசு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.