தமிழ்நாட்டில் இன்று (பிப்.05) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

விருதுநகர்: இராஜபாளையம் அருகே தொட்டியபட்டி மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிக்க பணிகள் நடைபெறுகிறது. இதனால் புதுப்பட்டி, கோதைநாச்சியார்புரம், கொத்தன்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காப்பேரி. புதுார், ராஜீவ்காந்தி நகர், இ. எஸ். ஐ காலனி, வேட்டை பெருமாள் கோயில், விஷ்ணு நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

திண்டுக்கல்: பழனி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பழனிநகர், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்காரபட்டி, சி. கலையம்புத்தூர், புளியம்பட்டி, தும்பலபட்டி, கோதைமங்கலம், பாறைபட்டி, சிவகிரிபட்டி, K. G. வலசு, க. நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கடலூர்: நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தந்தை பெரியார் தெரு ஜானகிராமன் நகர், கல்கி நகர், நெல்லிக்குப்பம், மாருதி நகர், நடேசன் தெரு, பெரிய தெரு, நகராட்சி அலுவலகம், அண்ணா நகர், முஸ்லிம் மேட்டு தெரு, பாரதியார் வீதி, மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேலம்: தும்பல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே கூட்டாத்துப்பட்டி, இந்த விளாம்பட்டி, ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, தும்பல், பனைமடல், தாண்டானூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அடுத்துள்ள அ. மேட்டூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது, எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கவுண்டபாளையம், அ. மேட்டூர், விஜயபுரம், கடம்பூர், அரும்பாவூர், தொண்டமாந்துறை, பாலக்காடு, சீனிவாசபுரம், பெரியம்மாபாளையம், பூலாம்பாடி, கள்ளப்பட்டி, பூஞ்சோலை, ஆகிய கிராமங்களில் காலை காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார விநியோகம் இருக்காது.

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதொட்டி மேல, வடக்கு, தெற்கு சித்திரை வீதிகள் கீழ பட்டமார் தெரு, மேல பட்ட மார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவனி மூல வீதி, வெள்ளியம்பலம் மேல செட்டி, கீழச்செட்டி தெரு, மறவர்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி ஒரு பகுதி, கீழச் சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி கிழக்கு ஆவணி மூலவீதி, கிழக்கு ஆவணி மூலவீதி, கீழமாசிவீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, அன்மார் கோவில் படித்துறை, வடக்கு மாச வீதி, வக்கீல் புதுத்தெரு, செலுத்தம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் ஆட்டு மந்தை, பொட்டால் நேதாஜி மெயின் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, தை கால் தெரு, வடக்கு வெளிவீதி,தெற்கு மேல கோபுர வீதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம்.

மதுரை ஆரப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, தமிழ் சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், திலகர் திடல், சந்தை அழகரடி 1 மற்றும் நாலாவது தெரு ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, புட்டுத் தோப்பு மெயின் ரோடு, மேல பொன் நகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு பகுதி முழுவதும் பொன்னகரம் பிராட்வே ஆகிய பகுதிகளில் மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: உடுமலை அருகே பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை காந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரெயில்நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ். வி. புரம், பாலப்பம்பட்டி, மை வாடிபிரிவு, கண்ணமநாயக்கனூர், குரல் குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள் பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது.

திருநெல்வேலி: டவுன் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி டவுன் மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, பொருட்காட்சி திடல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடைபடும் இருக்கும்.

தாழையூத்து உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜவல்லிபுரம், தச்சநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடைபடும்.