தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்த குறுந்தகவல் வந்தும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று புகார் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி பணம் கிரெடிட் ஆகாதவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே வரவு வைக்கப்படுகின்ற தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.