தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில் மகளிர் உரிமை தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் விதிகள் உள்ளன. எனவே தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வருவது உறுதியாகி உள்ளது.