தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்த பிறகு தற்போது 1 கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தில் சேர்க்கப்படாத பலரும் மேல் முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்து வரும் நிலையில் இந்த திட்டத்தில் தகுதி பெறாத பெண்கள் தங்களுக்கும் உரிமை தொகை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக பேசிய அமைச்சர் கே என் நேரு, தமிழக அரசின் நிதி வருவாய் அதிகரிக்கும் போது அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.